• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
60க்கும் மேலான ஐ.எஸ் கிளர்ச்சியாளர்கள் சுட்டுக்கொள்ளப்பட்டனர்
  2014-12-17 17:28:59  cri எழுத்தின் அளவு:  A A A   
60க்கும் மேலான ஐ.எஸ் கிளர்ச்சியாளர்கள் சிரியா அரசுப் படையால் டிசம்பர் 16ஆம் நாள் டீர் எஸ்-ஜோர் விமான நிலையத்தில் சுட்டுக்கொள்ளப்பட்டனர். அத்துடன் பெரியளவிலான ஆயுதங்களும் அழிக்கப்பட்டன என்று அந்நாட்டின் செய்தி நிறுவனம் ஒன்று தகவல் வெளியிட்டது.

டீர் எஸ்-ஜோர் மாநிலம், சிரியாவின் முக்கிய எண்ணெய் உற்பத்தி இடமாகும். தகவலின்படி, நடப்பு திங்களின் 10ஆம் நாள் முதல், டீர் எஸ்-ஜோர் விமான நிலையம் மீது தீவிரவாத அமைப்பான ஐ.எஸ் தாக்குதல் தொடுத்து வருகிறது. மேலும், அவ்விமான நிலையத்திற்கு அருகிலுள்ள பல இடங்களைக் கைபற்றியது என்பது குறிப்பிடத்தக்கது.

உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040