நிதி திரட்டலில் நிதி நிறுவனங்களுக்கு உதவி வழங்குமென ரஷிய மத்திய வங்கி 17ஆம் நாள் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்தது. அதே நாள் ரூபிள் கடும் மதிப்பிறக்கத்தைக் கட்டுப்படுத்த, சந்தைக்கு 700 கோடி டாலரை விற்பனை செய்ய ரஷிய நிதி அமைச்சகம் திட்டமிட்டுள்ளது. அன்னிய செலாவணி சந்தையை நிதானப்படுத்த உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று ரஷியத் தலைமையமைச்சர் மெத்வதேவ் அன்றே நடத்திய கூட்டத்தில் கோரிக்கை விடுத்தார்.