• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
தென் சீனக் கடல் பிரச்சினையில் சீனாவின் மறுமொழி
  2015-01-22 19:09:56  cri எழுத்தின் அளவு:  A A A   

சர்வதேச விதிகளைப் பின்பற்றும் வகையில், பெரிய நாடுகள், சிறிய நாடுகள் ஆகியவை எல்லாம், சமத்துவமான இடத்தில் அமைய வேண்டும். தென் சீன கடல் பிரச்சினை தொடர்பான செயல்பாட்டு முறை என்ற அறிக்கையை இப்பிரச்சினையிலுள்ள பல்வேறு தரப்புகளும் நடைமுறைப்படுத்த வேண்டும். இப்பிரச்சினைச் சாரா தரப்புகள் சர்ச்சைகளையும் முரண்பாடுகளையும் ஏற்படுத்த வேண்டாம் என்று சீன வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

அமெரிக்காவுக்கும் பிலிப்பைன்ஸுக்கும் இடையே நடைபெற்ற 5-வது இரு தரப்புப் பேச்சுவார்த்தைக்கு பிறகு, அமெரிக்க வெளியுறவுத் துறை துணை அமைச்சர் தானீல் ருச்சேல் தென்சீனகடல் பிரச்சினை தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசி, பெரிய நாடு சிறிய நாட்டை பலவீனப்படுத்த முடியாது என்று தெரிவித்தார். இந்த கருத்துக்குப் பதில் அளிக்கும் வகையில், சீன வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் குவா சுட்ன் யீங் அம்மையார் 22ஆம் நாள் இவ்வாறு தெரிவித்தார்.

இப்பிரச்சினைச் சாரா நாடுகள், நியாயமான நிலைப்பாட்டை வெளிக்காட்டி, நம்பிக்கை மற்றும் ஒத்துழைப்புக்குப் பயனளிக்கும் கருத்துக்களை தெரிவிக்க வேண்டும் என்றும் பிரதேச அமைதி மற்றும் நிலைத்தன்மைக்கு உதவிபுரியும் விஷயங்களைச் செய்ய வேண்டும் என்றும் குவா சுட்ன் யீங் குறிப்பிட்டார்.

உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040