ஐ.நா தலைமைச் செயலாளர் பான் கி மூன் 22-ஆம் நாளிரவு அறிக்கை ஒன்றை வெளியிட்டு, ஏமன் அரசுத் தலைவர் மற்றும் தலைமையமைச்சர் தங்களது பதவிகளிலிருந்து விலகியதற்கு ஆழந்த கவலை தெரிவித்தார். அத்துடன், அந்நாட்டின் பல்வேறு தரப்புகள் கட்டுப்பாட்டுடன் இருக்க வேண்டும் என்றும் அவர் வேண்டுகோள் விடுத்தார்.
பான் கி மூனின் ஏமன் பிரச்சினைக்கான சிறப்பு ஆலோசகர் பெனுமால் அந்நாட்டின் தலைநகர் சானாவில் தொடர்புடைய பல்வேறு தரப்புகளுடன், தற்போதைய நெருக்கடியைத் தீர்ப்பது பற்றி கலந்தாய்வு நடத்தி வருகின்றார். பல்வேறு தரப்புகள் பெனுமாலுடனான ஒத்துழைப்பை நெருங்க வேண்டும் என்று பான் கி மூன் வேண்டுகோள் விடுத்தார்.