பயங்கரவாதத்தை ஒடுக்க சர்வதேச ஒத்துழைப்பை சீனா வலுப்படுத்தும்
2015-01-23 17:19:58 cri எழுத்தின் அளவு: A A A
பயங்கரவாதத்தை ஒடுக்கும் சீனாவின் நிலைப்பாட்டை சீன வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் ஹுவா ச்சுன்யிங் அம்மையார் 23ஆம் நாள் பெய்ஜிங்கில் மீண்டும் வலியுறுத்தினார். பயங்கரவாத எதிர்ப்பு உள்ளிட்ட துறைகளில், சீனா சர்வதேசச் சமூகத்துடன் பயனுள்ள ஒத்துழைப்பை வலுப்படுத்த விரும்புவதாக அவர் தெரிவித்தார். மலேசியாவை மாற்றுத் தளமாக்கி, 300க்கும் மேற்பட்ட சீனர்கள், ஐ.எஸ் அமைப்பில் சேர்ந்துள்ளனர் என்று, அண்மையில் செய்தி ஊடகங்கள் அறிவித்துள்ளது பற்றிக் கூறுகையில், ஹுவா ச்சுன்யிங் இவ்வாறு கூறினார்.
உங்கள் கருத்தை பதிவு செய்ய