சீன அரசுத்தலைவர் ஷிச்சின்பிங்கின் சிறப்புப் பிரதிநிதியும் அரசவை உறுப்பினருமான யாங் ஜியேச்சீ 24ஆம் நாள் லியாட் நகரில் சௌதி அரேபியாவின் முன்னாள் மன்னர் அப்துல்லாவுக்கு அஞ்சலி செலுத்தும் நடவடிக்கையில் கலந்து கொண்டு, அந்நாட்டின் புதிய மன்னர் சல்மானுடன் குறுகிய நேரம் பேசினார்.
சீன தலைவர்கள், அரசு மற்றும் மக்களின் சார்பில் காலமான மன்னர் அப்துல்லாவுக்கு யாங் ஜியேச்சீ ஆழ்ந்த இரங்கல் தெரிவித்து, சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங்கின் செய்தியைப் பகிர்ந்து கொண்டார். மன்னர் அப்துல்லா தொலைநோக்கு பார்வையுடன் கூடிய, மதிப்புக்குரிய அரசியல்வாதி. சௌதி அரேபியாவின் நிரந்தர அமைதி மற்றும் பொருளாதார வளர்ச்சிக்கும், சர்வதேச மற்றும் பிரதேச அமைதிக்கும் அவர் பெரும் பங்காற்றியுள்ளார். இத்தகைய நெருங்கிய நண்பரை இழந்ததில் மன வேதனை அடைவதாக ஷிச்சின்பிங் தன் செய்தியில் கூறினார். இதனிடையில், புதிய மன்னராக பதவியேற்ற சல்மானுக்கும், சௌதி அரேபியா மன்னரின் தலைமையில் நன்றாக வளரவும் அவர் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொண்டார்.