சீன மக்கள் அரசியல் கலந்தாய்வு மாநாட்டுத் தலைவர் யூச்செங்ஷெங் 26ஆம் நாள் மக்கள் மாமண்டபத்தில், பாகிஸ்தான் தரைப்படைத் தலைவர் ரஹீல் ஷரிஃபைச் சந்தித்தார்.
சீனாவும் பாகிஸ்தானும் நிரந்தர நண்பர்களாகும். பாகிஸ்தானுடன் இணைந்து, இருநாட்டு ஒத்துழைப்புறவை உயர்த்தி, சீன-பாகிஸ்தான் பொருளாதார மண்டலத்தின் கட்டுமானத்தை முன்னேற்ற சீனா விரும்புகிறது. பயங்கரவாத எதிர்ப்பில் பாகிஸ்தான் மேற்கொண்டுள்ள முயற்சிகளை சீனா பாராட்டுவதோடு ஆதரிக்கவும் செய்கிறது என்று யூச்செங்ஷெங் கூறினார்.
ரஹீல் கூறுகையில், சீனாவுடனான உறவு பாகிஸ்தான் தூதாண்மை கொள்கைக்கு அடிப்படையாக அமைகிறது. நாட்டின் உரிமை நலன்களைப் பேணிக்காக்கும் சீனாவுக்கு பாகிஸ்தான் தொடர்ந்து உறுதியான ஆதரவளிக்கும் என்று தெரிவித்தார்.