சீனத் தலைமை அமைச்சர் லீக்கெச்சியாங்கும் சீனாவில் பயணம் மேற்கொண்டிருக்கும் பிரெஞ்சு தலைமை அமைச்சர் மானூல் கார்லோஸ் வாலும் 29ஆம் நாள் செய்தியாளர் கூட்டத்தில் கூட்டாகக் கலந்து கொண்டனர். மாயமான மலேசிய எம் எச் 370 விமானம் பற்றி மலேசியா வெளியிட்ட அறிக்கையை குறித்து லீக்கெச்சியாங் உரைநிகழ்த்தினார். அவர் கூறுகையில்,
விமானத்திலுள்ள 154 சீனப் பயணிகள் மற்றும் 4 பிரெஞ்சு பயணிகள் உள்பட அனைவருக்கும் சீன அரசும் மக்களும் ஆழ்ந்த வருத்தம் தெரிவித்துள்ளனர். அவர்களின் குடும்பத்தினருக்கும் ஆழ்ந்த ஆறுதலை தெரிவித்துள்ளனர். மலேசியா சொந்த வாக்குறுதியை நடைமுறைப்படுத்திப் புலனாய்வுப் பணியைத் தொடர்ந்து மேற்கொள்ள வேண்டும். மாயமான விமானம் மற்றும் பயணிகளைக் கண்டறிய வேண்டுமென லீக்கெச்சியாங் வலியுறுத்திக் கூறினார்.