இந்தியா மற்றும் சீனா ஆகிய நாடுகளுடனான உயர்நிலையிலான தூதாண்மை உறவை மேற்கொண்டு, அவ்விரு நாடுகளிடையேயான உறவை மேலும் வலுப்படுத்துவோம் என்று இலங்கையின் நிதித்துறை அமைச்சர் ரவி கருணநாயகா வியாழக்கிழமை தெரிவித்தார்.
இந்நாடுகளுடனான உறவுகளின் மூலம், இலங்கை மேலும் வளரச்சி பெறும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
கடந்த செவ்வாய்க்கிழமை, இலங்கைக்கான சீன தூதர் மற்றும் இந்தியத் தூதர்களை சந்தித்த ரவி கருணநாயாக, இருநாட்டுறவுகள் குறித்து விரிவான ஆலோசனை நடத்தினார்.