ஐயத்திற்குரிய வகையில் ஜப்பானிய பிணைக்கைதி கேன்ஜி கோடோவைக் கொலை செய்வது போன்ற காணொளியை, ஐ.எஸ் எனப்படும் தீவிரவாத அமைப்பு வெளியிட்டது. இதற்கு, ஐ.நா தலைமைச் செயலாளர் பான் கி மூன் உள்ளூர் நேரப்படி ஜனவரி 31ஆம் நாள் கடுமையான கண்டனத்தைத் தெரிவித்தார். நிபந்தனையின்றி அனைத்து பிணைக்கைதிகளையும் விடுவிக்குமாறும் ஐ.எஸ் அமைப்புக்கு அவர் வேண்டுகோள் விடுத்தார்.
ஐ.எஸ் அமைப்பால் கடத்தி செல்லப்பட்ட ஜப்பானியர் கேன்ஜி கோடோவைக் கொலை செய்வது போன்ற ஐயத்திற்குரிய காணொளி, மத்திய கிழக்கு நேரப்படி ஜனவரி 31ஆம் நாள் நள்ளிரவில் இணையதளத்தில் வெளியிடப்பட்டது.