• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
உக்ரைன் பிரச்சினைக்கான முத்தரப்புப் பேச்சுவார்த்தை தோல்வியடைந்தது
  2015-02-01 16:23:20  cri எழுத்தின் அளவு:  A A A   
உக்ரைன், ஐரோப்பியப் பாதுகாப்பு மற்றும் ஒத்துழைப்பு அமைப்பு, ரஷியா ஆகிய 3 தரப்புகள் இணைந்து 31ஆம் நாள் உக்ரைன் பிரச்சினைக்கான முத்தரப்புப் பேச்சுவார்த்தையை நடத்தின. ஆனால், கிழக்கு உக்ரைனிலுள்ள அரசு சாரா ஆயுதப் படையின் செயல்பாடுகளால் இப்பேச்சுவார்த்தை தோல்வியடைந்துள்ளது என்று உக்ரைனின் முன்னாள் அரசுத் தலைவர் ரிலோனித் குச்சிமா அன்று பெலாரஸின் தலைநகரான மின்ஸ்கில் அறிவித்தார்.

உக்ரைன் அரசு ஒரு சார்பாகப் போர் நிறுத்தத்தைச் செய்ய வேண்டும் என்று கிழக்கு உக்ரைனின் அரசு சாரா ஆயுதப் படையின் பிரதிநிதி அன்று காலை கோரியுள்ளார். இது குறித்து, குச்சிமா கூறுகையில், எந்த இறுதி எச்சரிக்கையையும் முன்நிபந்தனையையும் உக்ரைன் அரசு ஏற்றுக்கொள்ளாது என்று குறிப்பிட்டார்.

உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040