இவ்வாண்டு உலகளவில் பாசிசவாதி எதிர்ப்பு போர் வெற்றி பெற்ற 70வது ஆண்டு நிறைவாகும். சிறப்பு முக்கியத்துவம் வாய்ந்த இந்த ஆண்டில், வரலாற்றை சரியாக அறிந்து கொண்டு தற்சோதனை செய்யும் மனப்பான்மையை ஜப்பான் வெளிகாட்ட வேண்டும் என சீன விரும்புவதாக சீன வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித்தொடர்பாளர் ஹோங் லெய் 25ஆம் நாள் செய்தியாளர் கூட்டத்தில் தெரிவித்தார்.
இரண்டாவது உலகப் போர் முடிவிற்கு பிந்தைய 70ஆம் ஆண்டு குறித்து ஜப்பான் தலைமையமைச்சர் நிகழ்த்தவுள்ள கூற்று பற்றிய நிபுணர் கூட்டம் அன்று ஜப்பானில் நடைபெற்றது. இது பற்றி செய்தியாளர் சீனாவின் விமர்சனத்தைக் கேட்ட போது ஹோங் லெய் இதைத் தெரிவித்தார்.