இந்தியாவின் முக்கிய எதிர்க் கட்சியான காங்கிரஸ் கட்சியின் தலைவர் பதவியிலிருந்து சோனியா காந்தி விலகுவது பற்றி அடுத்த திங்கள் அறிவிக்கக் கூடும் என்று என்டி டிவி தொலைக்காட்சி நிலையம் புதன்கிழமை கூறியது.
1998ஆம் ஆண்டு சோனியா காந்தி காங்கிரஸ் கட்சியின் தலைவராக பதவி ஏற்றார். அடுத்த திங்கள் நடைபெறவுள்ள இக்கட்சியின் தேசிய மாநாட்டில் அவருக்குப் பதிலாக அவரது மூத்த மகன் ராகுல் காந்தி இப்பதவியை ஏற்பார் என்று கூறப்படுகிறது.
ஆனால், இச்செய்தி அதிகார வட்டாரத்தால் உறுதி செய்யப்படவில்லை.
ராகுல் காந்திக்கு 44 வயது ஆகின்றது. தற்போது காங்கிரஸ் கட்சியின் துணைத் தலைவராக இருக்கிறார். தற்போது இந்திய நாடாளுமன்றத்தில் வரவுச் செயலவுத் திட்டம் பற்றிய விவாதம் நடைபெற்றுக் கொண்டிருக்கும் போது விடுமுறையை கழிப்பதாகஅவர் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளார்.