ஆப்கானிஸ்தானின் பாஞ்சிஷிர் மாநிலத்தில் 24ஆம் நாளிரவு நிகழ்ந்த பனிச்சரிவில் குறைந்த்து 120 பேர் பலியாயினர் என்று அந்நாட்டின் தேசிய பேரிடர் நிர்வாக பணியகத்தின் தலைவர் முகமத் க்கார் 25ஆம் நாள் தெரிவித்தார்.
கடந்த சில நாட்களில் ஆப்கானில் பனிமழை பெய்து வருகிறது. இந்நாட்டின் பல வீடுகள் மலைக்கு அருகில் கட்டியமைக்கப்பட்டுள்ளதால், பனிச்சரிவு, மண் சரிவு முதலிய இயற்கை சீற்றங்களால் அடிக்கடி பாதிக்கப்படுகிறது.