2014ஆம் ஆண்டு சுமார் 15 இலட்சம் வெளிநாட்டுப் பயணிகளை இலங்கை வரவேற்றுள்ளது என்றும், வரலாற்றில் மிக அதிக அளவிலான இவ்வெண்ணிக்கை உயர்வுக்குச் சீனப் பயணிகளின் அதிகரிப்பு அதிக பங்காற்றியுள்ளது என்றும் அந்நாட்டின் மத்திய வங்கி வியாழக்கிழமை கூறியது.
கடந்த ஆண்டு இலங்கையின் சுற்றுலாத் துறை வளர்ச்சி வேகம் 19.8 விழுக்காடாகும். இந்தியா, சீனா, பிரிட்டன், ஜெர்மனி, மாலத்தீவு ஆகியவை இலங்கையில் பயணம் மேற்கொண்டுள்ள மிக அதிக ஐந்து நாடுகளாகும்.
ஜனவரி திங்களில் சீனாவிலிருந்து வந்த பயணிகளின் எண்ணிக்கை 8.9 விழுக்காடு அதிகரித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.