அமெரிக்க நாட்டு உளவுத் துறை இயக்குநர் அலுவலகம் அண்மையில், அறிக்கை ஒன்றை வெளியிட்டு, இணையத்தில் அச்சுறுத்தலை உருவாக்கும் முக்கிய நாடுகளில் ஒன்றாக சீனாவும் இருப்பதாக குறிப்பிட்டது. இது குறித்து, சீன வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித்தொடர்பாளர் ஹோங் லெய் 27ஆம் நாள் பதிலளித்துப் பேசுகையில், இணையத்திலான அச்சுறுத்தல் குறித்து சர்வதேச சமூகம் நியாயமான கருத்துக்களைக் கொண்டுள்ளது என்று தெரிவித்தார்.
சீனா, சர்வதேச இணையத்திலான அமைதி மற்றும் நிதானத்தை உறுதியாக பேணிகாக்கிறது. அதேவேளை இணைய ஒழுங்கை உருவாக்குவதற்கான அமைப்பாளராகவும் உள்ளது. இணைய பாதுகாப்பில் சில நாடுகள் உண்மையாக கவனம் செலுத்தினால், அவை, சர்வதேச அளவிலான ஒத்துழைப்பில் பங்கெடுக்க வேண்டும் என்றும் ஹோங் லெய் வலியுறுத்தினார்.