• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
சீன, இலங்கை வெளியுறவு அமைசச்ர்களின் பேச்சுவார்த்தை
  2015-02-28 09:22:15  cri எழுத்தின் அளவு:  A A A   

சீன வெளியுறவு அமைச்சர் வாங் யீ 27ஆம் நாள் பெய்ஜிங்கில் இலங்கை வெளியுறவு அமைச்சர் சமராவேராவுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். சீன-இலங்கை உறவு, சீனாவின் சுமூகமான வெளியுறவுக் கொள்கைகளில் ஒரு முக்கிய பகுதியாகும் என்று வாங் யீ தெரிவித்தார்.

இவ்வாண்டின் மார்ச் திங்கள் இறுதியில் சீனாவில் பயணம் மேற்கொள்ள இலங்கை அரசுத் தலைவர் மைத்ரிபால சிரிசேனாவிடம் சீன அரசுத் தலைவர் ஷீ ச்சின்பிங் அதிகாரப்பூர்வ அழைப்பு விடுத்துள்ளார் என்றும், இப்பயணம் அதிக சாதனைகளை பெற உத்தரவாதம் செய்யும் பொருட்டு, இலங்கையுடன் இணைந்து நெருக்கமாக ஒத்துழைக்க சீனா விரும்புவதாகவும் வாங் யீ தெரிவித்தார்.

அரசுத் தலைவர் மைத்ரிபால சிரிசேனா இலங்கை-சீன உறவில் பெரும் கவனம் செலுத்தி, சீனப் பயணம் வெற்றி பெற எதிர்பார்ப்பதாகவும், இலங்கை-சீன உறவின் வளர்ச்சிக்கு மேலதிக வாய்ப்புகளை வழங்க இலங்கை விரும்புவதாகவும் சமராவேரா தெரிவித்தார்.

உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040