கடந்த ஆண்டில் சீனாவின் ஜியாங் சூ மாநிலத்தில் ஆய்வுப் பயணம் மேற்கொண்டபோது, சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங் 'நான்கு முழுமைகள்' என அழைக்கப்படும் தொலைநோக்குச் செயற்திட்டத்தை முன்வைத்துள்ளார்.
ஓரளவு வசதியான சமூகத்தை முழுமையாகக் கட்டியமைப்பது, சீர்திருத்தத்தை முழுமையாக ஆழமாக்குவது, சட்ட ரீதியிலான ஆட்சியை முழுமையாக நடைமுறைப்படுத்துவது, கட்சியின் கட்டுப்பாட்டை முழுமையாக வலுப்படுத்துவது ஆகிய நான்கு அம்சங்கள், இந்தச் செயற்திட்டத்தில் அடக்கம் என்பது குறிப்பிடத்தக்கது.