பாகிஸ்தான் நாட்டைச் சேர்ந்த அபித் நாசர் குற்றமுடையவர் என்று அமெரிக்க நியூயாபர்க் கூட்டாட்சி நீதி மன்றம் 4ஆம் நாள் அறிவித்தது. 2009ஆம் ஆண்டு நியூயார்க்கிலுள்ள சுரங்க இருப்புப்பாதையை வெடி குண்டு வைத்துத் தகர்க்க முயற்சித்தது, பிரிட்டனின் மென்சேஸ்தேர் நகரில் உள்ள வணிக வளாகம் மற்றும் டென்மார்க் தலைநகர் கோபன்ஹேகன் மீது தாக்குதல் தொடுத்தல் ஆகிய அல் கயிதா இயக்கத்தின் பல்வேறு சூழ்ச்சிகளில் ஈடுபட்டதாக அவர் குற்றம் சாட்டப்பட்டார்.
28 வயதான அபித் நாசர், பிரிட்டனின் நடுத்தர வகுப்பு குடும்பத்தில் பிறந்தார். அவர் சிறந்த கல்வியைப் பெற்றுள்ள போதிலும், அதி திவிரவாத அமைப்பில் சேர்ந்தார். 2009ஆம் ஆண்டு அவர் பிரிட்டனில் கைது செய்யப்பட்டார்.