மார்ச் 5-ஆம் நாள் நடைபெற்ற 12ஆவது சீனத் தேசிய மக்கள் பேரவையின் 3ஆவது கூட்டத் தொடரில் சீனத் தலைமையமைச்சர் லீக்கெச்சியாங் வழங்கிய அரசுப் பணியறிக்கையில், ஓரளவு வசதியான சமூகத்தின் உருவாக்கத்தை சீனா நிறைவேற்றுவது என்ற குறிக்கோள் குறித்து விரிவாக விளக்கம் தெரிவித்தார். இதில், ரஷியா மற்றும் மத்திய ஆசியாவின் ஊடகங்கள் அதிக கவனம் செலுத்தியுள்ளன.
சீனப் பொருளாதார அதிகரிப்பு வேகத்தின் தணிவும், மக்களின் வாழ்க்கை தரம் உயர்வும் என்ற விமர்சனக் கட்டுரையை இன்றைய ரஷியா எனும் சர்வதேச செய்தி நிறுவனம் வெளியிட்டது. சீனாவின் சந்தை பொருளாதார அமைப்பு முறை நாளுக்கு நாள் பக்குவம் அடைவது, சீன அரசு பயனுள்ள ஒட்டுமொத்தக் கொள்ளைகளை வகுப்பது ஆகியவை, இந்நிலைமையை ஏற்படுத்தும் காரணங்கள் என்று இக்கட்டுரையில் கூறப்பட்டுள்ளது.