• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
கட்சிக் கட்டுப்பாட்டை வலுப்படுத்துவதற்கு பாராட்டுக்கள்
  2015-03-11 11:10:09  cri எழுத்தின் அளவு:  A A A   

சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் 18-ஆவது தேசிய மாநாடு செயல்பட்ட பிறகு ஊழல் ஒழிப்புத் துறையில் சீன அரசு தெளிவுமிக்க சாதனைகளைப் படைத்துள்ளது. அதில், சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்திய கமிட்டிப் பொதுச் செயலாளர் ஷிச்சின்பிங் முன்வைத்த 'நான்கு பன்முகங்கள்' என்ற செயற்திட்டம் அதிக கவனத்தை ஈர்த்துள்ளது. குறிப்பாக, இச்செயல்திட்டத்தின் ஒரு பகுதியாக கட்சியின் ஒழுங்குமுறையைக் கண்டிப்பான முறையில் வலுப்படுத்தும் செயல், ஊழல் ஒழிப்புப் பணியைப் புதிய நிலைக்கு உயர்த்தியுள்ளது. அதில் வெளிநாட்டு செய்தி ஊடகங்கள் மிகுந்த கவனம் செலுத்தியுள்ளன.

கட்சியின் ஒழுங்குமுறையைக் கண்டிப்பான முறையில் வலுப்படுத்துவது என்பது, நான்கு பன்முகங்கள் என்றும் செய்தித் திட்டத்தில் மிக முக்கிய புத்தாக்கமாக உள்ளது என்று அமெரிக்காவின் தி ஹுஃப்பிங்டன் போஸ்ட் எனும் செய்தியேடு செய்தி வெளியிட்டது.

ஊழல் பெரிய பிரச்சினையாக மாறியுள்ளதைக் கருத்தில் கொண்ட சீன அரசு பயனுள்ள நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது என்று ஸ்பெயின் நாட்டின் ஏஃபே செய்தி நிறுவனத்தின் செய்தியாளர் சாரா தியஸ் கருத்து தெரிவித்தார்.

சீன விவகாரங்களுக்கான பாகிஸ்தானின் ஆய்வு நிபுணரான ஃபசல் உர் ராஹ்மன் சீன அரசின் ஊழல் ஒழிப்புக்கு பாராட்டு தெரிவித்தார். அவர் மேலும் கூறியதாவது

ஊழல் பிரச்சினை, உலக நாடுகளில் நிலவுகின்ற கடினமான பிரச்சினையாகும். ஊழல் ஒழிப்புக்காக, சீன அரசு ஆழமான தொடர்ச்சியான மற்றும் பயனுள்ள நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இவை, சீன சமூகத்தின் இணக்கமான வளர்ச்சியைத் தூண்டும் அதேசமயத்தில் மக்களிடையே நம்பிக்கையை ஏற்படுத்தி புதிய சாதனைகளுக்கு வழிவகுத்துள்ளது என்றா.

உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040