11ஆம் நாள் முற்பகல் நடைபெற்ற சீன மக்கள் அரசியல் கலந்தாய்வு மாநாட்டின் 12ஆவது தேசிய கமிட்டியின் 3ஆவது கூட்டத்தொடரின் செய்தியாளர் கூட்டத்தில், சீன மக்கள் அரசியல் கலந்தாய்வு மாநாட்டின் நிரந்தர உறுப்பினரும் தேசிய இன மற்றும் மதக் கமிட்டித் தலைவருமான ச்சூ வெய்ச்சுன் செய்தியாளர்களின் கேள்விகளுக்குப் பதிலளித்தார். சீனாவின் தேசிய இனக் கொள்கை சரியாகவும் வெற்றிகரமாகவும் உள்ளது. வேறுபட்ட தேசிய இனங்கள் ஒன்றுகூடி வாழும் விகிதத்தின் அதிகரிப்புடன், சீனத் தேசத்தின் பல்வேறு இனங்களின் ஒற்றுமைக்கும், எதிர்கால பணியில் முக்கியத்துவம் அளிக்கப்படும் என்று அவர் கூறினார்.
மேலும், பல்வேறு இனங்களிடையிலான தொடர்பு, பரிமாற்றம் மற்றும் ஒற்றுமைக்கு எதிர்காலப் பணியில் முக்கியத்துவம் அளிக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.