இந்நிகழ்ச்சியின் போது, டுவிட்டர் சமூக வலைத்தளத்தின் தலைமை செயல் இயக்குநர் டிக் கோஸ்டோலோ உடனிருந்தார்.
டுவிட்டர் நிர்வாகத்துடன் இணைந்து, மத்திய அரசால் இந்த சேவை தொடங்கப்பட்டுள்ளது. இதன்மூலம், குறிப்பிட்ட சில எண்களுக்கு அழைப்பு விடுத்து,. அழைப்பை துண்டித்தால், அரசு அலுவலகங்கள் தொடர்பான தகவல்கள் குறுந்தகவல்களாக மக்களைச் சென்றடையும். இந்த சேவை, மோடியின் டிஜிட்டல் இந்தியா மயமாக்கும் நடவடிக்கையின் ஒரு பகுதியாகும்.