இலங்கை அரசுத் தலைவர் மைத்ரிபால சிரிசேனா மார்ச் 25ஆம் நாள் இலங்கையிலிருந்து சீனாவுக்குச் சென்று பயணம் மேற்கொள்ளத் துவங்கினார்.
டெய்லி மிரர், டெய்லி நியூஸ், தி ஐஸ்லேன்ட் முதலிய இலங்கையின் முக்கிய ஆங்கில மொழி செய்தி ஊடகங்கள் அத்தகவலை வெளியிட்டன.
இலங்கையின் அரசு சார் இலங்கை செய்தி தாள் டெய்லி நியூஸ் மார்ச் 24ஆம் நாள் அது குறித்து விமர்சனக் கட்டுரை ஒன்றை வெளியிட்டுள்ளது. புதிய காலத்தில் பொருளாதார மற்றும் வர்த்தகத்தில் சீனாவும் இலங்கையும் ஈட்டியுள்ள முன்னேற்றங்களைப் பற்றியும், எதிர் காலத்தில் இரு நாடுகளுக்கும் இடையேயான 21ஆவது நூற்றாண்டு கடல்வழிப் பட்டு பாதை கோட்பாட்டிலுள்ள ஒத்துழைப்பு வாய்ப்புகளைப் பற்றியும் அக்கட்டுரை குறிப்பிட்டுள்ளது.