இச்சுற்றுப்பயணத்தின்போது, அந்நாட்டு அரசு அதிகாரிகள், சமூக அமைப்புகளின் தலைவர்கள் உள்ளிட்டவர்களை அவர் சந்திக்க உள்ளார்.
தவிர, இலங்கையில் போர் நடந்த வடக்கு பகுதியில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு தமிழ் கட்சிகளின் தலைவர்களையும், தமிழர்களையும் அவர் சந்திப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
இலங்கையில் காணாமல்போனவர்கள் குறித்து விசாரணை மேற்கொள்வதற்காக ஐ.நா.வின் செயல் குழுவுக்கும், மனித உரிமைக்கான ஐ.நா.வின் உயர் ஆணையர் குழுவுக்கும், இலங்கை அரசு அழைப்பு விடுத்துள்ளது. இக்குழுவின் பயணத்துக்கு முன், ஐ.நா. சிறப்பு பிரதிநிதி ப்ப்லோ டி கிரீப் அங்கு பயணம் மேற்கொண்டுள்ளார்.
இறுதிக்கட்ட உள்நாட்டின்போரின்போது நிகழ்ந்த போர்குற்றங்கள் குறித்து விசாரணை மேற்கொள்ள உள்நாட்டிலேயே விசாரணை அமைப்பை ஏற்படுத்த, ஐநாவுடன் இலங்கை அரசு பேச்சுவார்த்தை நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது.