அமெரிக்கா, இந்தியா உள்பட பன்னாட்டுத் தலைவர்களின் கடவுச்சீட்டுத் தகவல் வெளியேற்றம்
ஆஸ்திரேலிய அரசு அதிகாரி ஒருவர் கடந்த ஆண்டில் அனுப்பிய மின்னஞ்சலில் அமெரிக்கா, பிரிட்டன், ஜெர்மனி, ரஷியா, இந்தியா, ஜப்பான் உள்பட பன்னாட்டு தலைவர்களின் கடவுச்சீட்டுத் தகவலை எதிர்பாராதவாறு வெளியிட்டார்.
மனிதர் தவறு செய்தல் காரணமாக இந்தத் தகவல் வெளியிடப்பட்டது என்று ஆஸ்திரேலியக் குடிவரவுத் துறை கருத்து தெரிவித்துள்ளது. இத்தகைய சம்பவம் மீண்டும் ஏற்படாமல் தவிர்க்க, தற்போது, மின்னஞ்சல் மீதான சோதனை மற்றும் கண்காணிப்பு வலுப்படுத்தப்பட்டுள்ளது என்று குடிவரவுத் துறை அறிவித்துள்ளது.