21-வது நூற்றாண்டு கடல்வழி பட்டுப் பாதையை ஆசிய நாடுகள் இணைந்து கட்டியமைப்பது என்ற சர்வதேச ஆய்வுக் கூட்டம் பெய்ஜிங்கில் 11ஆம் நாள் சனிக்கிழமை நடைபெற்றது. கடல்வழி பட்டுப் பாதையின் நெடுகிலுள்ள இலங்கை, இந்தோனேசியா, சிங்கப்பூர் உள்ளிட நாடுகளைச் சேர்ந்த அறிஞர்கள் கூட்டத்தில் பங்கேற்று, விவாதித்துள்ளனர். இக்கூட்டத்தில் "ஒரு மண்டலம் மற்றும் ஒரு பாதைக்" கட்டுமானம் பற்றி பல பொதுக் கருத்துக்கள் உருவாகியுள்ளன. 21-வது நூற்றாண்டு கடல்வழி பட்டுப் பாதையின் கட்டுமானம் மீது அறிஞர்கள் மிகுந்த எதிர்பார்ப்புகளைத் தெரிவித்துள்ளனர்.
21-வது நூற்றாண்டு கடல்வழி பட்டுப் பாதைக் கட்டுமானம், கூட்டு வெற்றி அடையும் முன்மொழிவு ஆகும். ஆசிய நாடுகள் இந்த கட்டுக்கோப்புக்குள் ஒத்துழைப்பை வலுப்படுத்தி, பிரதேசத்தின் வளர்ச்சிக்கு புதிய உந்து ஆற்றலை ஏற்படுத்த வேண்டும் என கூட்டத்தில் விருப்பம் தெரிவிக்கப்பட்டுள்ளது.