ஒவ்வொரு ஆண்டின் இக்காலத்திலும், சீனாவின் மத்திய பகுதியிலுள்ள லோயாங் நகரத்தில் "பியோனி" பூக்கள் மலரும். சுற்றுலா மேற்கொண்டுள்ள உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு பயணிகள் பூக்கள் மலர்ந்து குலுங்குகின்ற காட்சியை பார்த்து ரசித்து வருகின்றனர்.
மேலும், சீன வானொலி நிலையத்தின் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டுச் செய்தியாளர்கள் 12ஆம் நாள் ஞாயிற்றுக்கிழமை லோவ்யாங் நகருக்குச் சென்று, அங்குள்ள பியோன பூக்களை கண்டுரசித்ததுடன், பூக்களின் பண்பாட்டை பற்றியும் அறிந்து கொண்டனர்.
பியோனி மலர்களை தவிர, லோவ் யாங் சீனாவின் வரலாற்றில் மிக புகழ்பெற்ற பழைய நகரமும் ஆகும். பூக்களை விரும்பும் நேயர்களே, சீனாவில் பயணம் மேற்கொள்ள வாய்ப்பு இருந்தால், லோவ் யாங் நகரில் சுற்றுலா செய்ய தவறாதீர்கள்.