அரசுத் தலைவர் ஷி ச்சின்பீங்கின் கட்டுரை
2015-04-19 16:57:43 cri எழுத்தின் அளவு: A A A
ஏப்ரல் 20ஆம் நாள் முதல் சீன அரசுத் தலைவர் ஷி ச்சின்பீங் பாகிஸ்தானில் அரசமுறை பயணம் மேற்கொள்ளவுள்ளார். சீன-பாகிஸ்தான் மக்களின் நட்புறவு நீடுழிவாழ்க என்ற தலைப்பிலான அவரது கட்டுரை பாகிஸ்தானின் டெய்லி ஜாங், டெய்லி டைம்ஸ் ஆகிய செய்தி ஏடுகளில் 19ஆம் நாள் வெளியிடப்பட்டுள்ளது.தனது முதலாவது பாகிஸ்தான் பயணத்தின் மீது ஷி ச்சின்பீங் மிகுந்த ஆர்வத்தை வெளிப்படுத்தியுள்ளார். பாகிஸ்தான் உள்ளிட்ட தெற்காசிய நாடுகளுடன் இணக்கமாக பழகி, பட்டுப்பாதை பொருளாதார மண்டலம் மற்றும் 21ஆவது நூற்றாண்டு கடற்வழிப் பட்டுப்பாதை என்ற நெநோக்குத் திட்டம் மூலம் கூட்டாக வளர்ச்சி அடைய வேண்டும் என்று அவர் இக்கட்டுரையில் விருப்பம் தெரிவித்தார்.
உங்கள் கருத்தை பதிவு செய்ய