மே 6ஆம் நாளுடன், சீன-ஐரோப்பிய ஒன்றிய தூதாண்மை உறவு உருவாக்கப்பட்ட 40வது ஆண்டு நிறைவாகும். அமைதி, அதிகரிப்பு, சீர்திருத்தம், நாகரிகம் ஆகிய நான்கு அம்சங்கள் கொண்ட கூட்டாளி உறவை உருவாக்கும் இலக்கை, இரு தரப்பும் செயல்படுத்த வேண்டும். அத்துடன், இரு தரப்புகளின் மக்களுக்கு நன்மை புரிந்து, உலக அமைதி, நிலைப்பு தன்மை, வளர்ச்சி ஆகியவற்றைப் பேணிக்காப்பதற்குப் பங்காற்ற வேண்டும் என்று வாங்யீ தெரிவித்தார்.
ஃபெடரிகா மொஹரினி பேசுகையில், சீனாவுடன் நட்புறவை விரிவாக்கி, ஒத்துழைப்புகளை வலுப்படுத்தி, இரு தரப்பு உறவின் புதிய எதிர்காலத்தைத் துவக்கி வைக்க ஐரோப்பிய ஒன்றியம் விரும்புகிறது என்றார்.