• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
சீனப் பயணம் மீதான மோடியின் எதிர்பார்ப்பு
  2015-05-13 09:32:34  cri எழுத்தின் அளவு:  A A A   

மே 14ஆம் நாள் முதல் 16ஆம் நாள் வரை, சீனாவில் பயணம் இந்தியத் தலைமையமைச்சர் மோடி மேற்கொள்ள உள்ளார். சீனாவுக்கு வருவதற்கு முன்பு, இந்தியாவிலுள்ள சீனச் செய்திஊடகங்களுக்கு மோடி கூட்டுப் பேட்டியளித்தார். சீனாவில் பயணம் மேற்கொள்வதை எதிர்பார்த்துள்ளேன். இப்பயணத்தின் மூலம், சீன-இந்திய உறவின் வளர்ச்சியை விரைவுப்படுத்த வேண்டும் என்று அவர் விருப்பம் தெரிவித்தார்.


இந்தியத் தலைமையமைச்சர் பதவி ஏற்ற பிறகு, மோடி சீனாவில் பயணம் மேற்கொள்வது முதல்முறை. சீனாவில் பயணம் மேற்கொண்டு, குறிப்பாக, சி ஆன் நகரத்தில் பயணம் மேற்கொள்ள அவர் மிகவும் எதிர்பார்க்கின்றார். அவர் கூறியதாவதுசி ஆன் நகரம், சீன அரசுத் தலைவர் ஷி ச்சின்பீங்கின் சொந்த ஊர். அவரது சொந்த ஊரில் பயணம் மேற்கொள்வது எனக்கு பெருமை. சுயேன சாங் எனது சொந்த நாடாக இந்தியாவுக்கு, சீனாவின் சி ஆன் நகரிலிருந்துதான் புறப்பட்டார். இந்திய-சீன உறவு, சில நூற்றாண்டுகாலமாகியுள்ளது. சின் ஆன் நகரத்தில் சீன அரசுத் தலைவர் ஷி ச்சின்பீங்கைச் சந்திப்பது, இரு நாடுகளுக்கிடையில் வரலாற்றை மீண்டும் இணைக்கும் என்று அவர் தெரிவித்தார்.


இந்திய-சீன உறவு தொடர்ந்து வளர்ந்து வரும். இந்தி உறவுக்கு மாபெரும் உள்ளார்ந்த ஆற்றல் உள்ளது. வளரும் நாடுகளின் வளர்ச்சியை நனவாக்கி, வறுமையை ஒழிப்பதற்கு, இந்தியாவும் சீனாவும் ஒன்றுடன் ஒன்றிணைந்து உதவி செய்ய வேண்டும் என்று அவர் தெரிவித்தார். அவர் மேலும் கூறியதாவதுவளரும் நாடுகளுக்கு உதவி செய்யும் கடமை இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இருக்கும். இத்தகைய நாடுகளில் நோய் தடுப்பு மற்றும் வறுமை ஒழிப்பு ஆகிய பணிகள், உலக வளர்ச்சிக்கு நலன் தரும். 21ஆம் நூற்றாண்டு, ஆசிய நூற்றாண்டாகும். இந்தியாவும் சீனாவும் சேர்ந்து, உலகத்திற்கு அமைதி மற்றும் நிதானம் என்ற விருப்பத்தைத் தெரிவிக்க வேண்டும் என்று அவர் தெரிவித்தார்.சீன பொது மக்களுடன் தொடர்பு கொள்வதை விரும்புவதாக அவர் தெரிவித்தார். இதற்கு முன்பு, சீன முக நூல் வெய்போவில் அவர் தனது பக்கத்தைத் திறந்துள்ளார். இது வரை, 46 ஆயிரம் பேர் அவரது பக்கத்தில் இணைந்துள்ளனர். இதன் மூலம், சீன இணையத்தைப் பயன்படுத்திவர்களுடன் தொடர்பு கொள்வது அவரது நோக்கமாகும் என்று கருதப்படுகிறது.


சீனாவின் ஒரு மண்டலம் மற்றும் ஒரு பாதை குறித்த கேள்விக்கு பதில் அளித்த மோடி. கடந்த காலங்களில் இருந்தே ஆசியாவின் பல பகுதிகளை கடல் வழி மற்றும் தரை வழி மூலம் இணைத்துள்ளோம்.


தற்போது, வளர்ச்சி பெற்று வரும் ஆசியாவுக்கு, அதன் பல்வேறு பகுதிகளை போக்குவரத்தின் மூலம் இணைப்பது முக்கியமாகும். சீனாவைப் போல இந்தியாவும் கிழக்கு மற்றும் மேற்குப் பகுதிகளில் போக்குவரத்தை ஏற்படுத்தி, உறவை வலுப்படுத்த விரும்புகிறது என்று தெரிவித்தார்.

உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040