இந்திய தலைமையமைச்சர் நரேந்திர மோடி மே 14 முதல் 16ஆம் நாள் சீனாவில் பயணம் மேற்கொள்வார். பெய்ஜிங் பல்கலைக்கழகத்தின் ஆசிய ஆராய்ச்சி மையத்தின் தலைவர் ஜியாங் ஜியிங்குய் பேட்டியளிக்கையில், பண்பாடும், பொருளாதாரமும் இப்பயணத்தின் முக்கிய அம்சங்களாகும் என்றார்.
நரேந்திர மோடி, இந்திய பாரம்பரிய பண்பாட்டின் பரவலில் அதிக முக்கியத்துவம் அளிக்கிறார். சீன பயணத்தின் போது, அவர் யுன்னான் மின்சு பல்கலைக்கழகத்துடன் உடன்படிக்கையை உருவாக்கி யூகா கல்லூரியை அமைக்கச் செய்வார். ஷாங்காய் பூதான் பல்கலைக்கழகத்துடன் மகாத்மா காந்தி மற்றும் இந்திய ஆராய்ச்சி மையத்தை நிறுவும் கையொப்பமிடும் விழாவிலும் அவர் கலந்து கொள்வார்.
தவிரவும், இந்தியாவின் சில மாநில முதல்வர்களும் மோடியுடன் வருவர். சீனாவின் முதலீட்டை ஈர்ப்பது அவர்களின் முக்கிய நோக்கமாகும். பயணத்தின் போது இரு நாடுகள் உருவாக்கும் உடன்படிக்கை தொகை 1000 கோடி அமெரிக்க டாலரை எட்ட கூடும் என்று இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.