சீனாவில் 3 நாள் பயணம் மேற்கொள்வதற்காக இந்திய தலைமை அமைச்சர் நரேந்திர மோடி 14ஆம் நாள் முற்பகல் ஷ்ஷான்சி மாநிலத்தின் தலைநகர் சி ஆன் நகரம் வந்தடைந்தார். தலைமை அமைச்சர் பதவி ஏற்ற பின் சீனாவில் அவர் பயணம் மேற்கொள்வது இதுவே முதல் முறை. சின் வம்சத்தின் முதல் பேரரசரின் டெர்ரகோட்டா வீர்ர் எனப்படும் சுடுமண் வீரர் சிலைகளை அவர் பார்வையிட்டார். அப்போது சீனாவின் ஒளிமயமான வரலாற்றின் மீது அவர் மிகுந்த ஆர்வம் கொண்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.