சீனத் தலைமை அமைச்சர் லீ கேச்சியாங், இந்திய தலைமை அமைச்சர் நரேந்திர மோடி ஆகியோர் வெள்ளிக்கிழமை பெய்ஜிங்கில் 24 ஒத்துழைப்பு உடன்படிக்கைகளின் கையொப்பமிடும் விழாவில் கலந்து கொண்டனர்.
இருப்புப்பாதை, சுரங்கத் தொழில், கல்வி, விண்வெளிப் பயணம், திரைப்படம் முதலிய துறைகளுடன் இவ்வுடன்படிக்கைகள் தொடர்புடையவை.
தவிர, சி ச்சுவான் மாநிலம் மற்றும் கர்நாடக மாநிலம், சுங் ச்சிங் மற்றும் சென்னை, சிங்தாவ் மற்றும் ஹைதராபாத், துன்ஹுவாங் மற்றும் ஔரங்காபாத் ஆகிய வை 4 ஜோதி நட்புறவு மாநிலம் மற்றும் நகரங்களாக உறுதி செய்யப்பட்டுள்ளன.