• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
சீன-இந்திய ஒத்துழைப்பு கருத்தரங்கில் கலந்து கொண்ட லிக்கெச்சியாங் மற்றும் மோடி
  2015-05-15 18:08:26  cri எழுத்தின் அளவு:  A A A   
15ஆம் நாள் பெய்ஜிங்கிலுள்ள மக்கள் மாமண்டபத்தில், சீன தலைமையமைச்சர் லீக்கெச்சியாங்கும் இந்திய தலைமையமைச்சர் நரேந்திர மோடியும் கூட்டாக, முதல் சீன-இந்திய உள்ளூர் ஒத்துழைப்புக் கருத்தரங்கில் கலந்து கொண்டு உரை நிகழ்த்தியுள்ளனர்.

இக்கருத்தரங்கின் துவக்கம், இரு நாட்டுறவிற்கு முக்கியத்துவம் வாய்ந்தது என்று லீக்கெச்சியாங் தெரிவித்தார்.

சீனாவும் இந்தியாவும் மக்கள் தொகை அதிகமுள்ள வளரும் நாடுகளாக, தொழில்மயமாக்கம், நகரமயமாக்கம் ஆகியவற்றை முன்னேற்றியுள்ளன. இவற்றின் உள்நாட்டுத் தேவையில் உள்ளார்ந்த ஆற்றல் மிகப் பெரியதாக இருக்கிறது என்று அவர் சுட்டிக்காட்டினார்.

உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040