சீனத் தலைமை அமைச்சர் லீ கேச்சியாங்கும், இந்திய தலைமை அமைச்சர் நரேந்திர மோடியும் 15ஆம் நாள் இணைந்து செய்தியாளர்களைச் சந்தித்துள்ளனர்.
இந்த சந்திப்பின்போது லீ கேச்சயாங் பேசுகையில்,
தலைமை அமைச்சர் மோடியுடன் இணைந்து நட்பார்ந்த முறையில் பேச்சுவார்த்தை நடத்தி, பல்வேறு துறைகளில் ஒத்துழைப்பை ஆழமாக்கி, மேலும் நெருங்கிய வளர்ச்சிக் கூட்டாளியுறவை அமைப்பது குறித்து அதிக பொது கருத்துக்களை எட்டியுள்ளதாக தெரிவித்தார்.