சீனா, இந்தியா நாடுகள் ஆகிய உலகில் மிக அதிக மக்கள் தொகை கொண்டுள்ள இரண்டு நாடுகளாக திகழ்கின்றன. மேலும், இவை, ஆசியாவில் மிகப் பெரிய வளரும் நாடுகளாகவும் திகழ்கின்றன. தவிர, உலகின் கவனத்திற்குரிய புதிதாக வளர்ந்து வரும் பொருளாதார சமூகமாகவும் இந்நாடுகள் விளங்குகின்றன.இந்த இரு நாடுகளின்விபரம் பற்றி உங்களுக்கு தெரியுமா?
இரு நாடுகளின் பாரம்பரிய பண்பாட்டில் இருந்து, சீன டிராகன் மற்றும் இந்திய யானை என்ற சொற்கள் தோன்றியுள்ளன. சீன டிராகன், இந்திய யானை என்ற சொற்கள் உலகின் செய்தி ஊடகங்களில் அதிகமாக படிக்கப்பட்டுள்ளன. இந்நிலையில், சீனா-இந்தியா இடையே நட்புறவு மற்றும் ஒத்துழைப்பு என்பதற்கு டிராகனும் யானையும் இணைந்து நடனமாடுவது என்ற பொருள் உங்களுக்கு தெரியுமா?
சீன அரசுத் தலைவர் ஷி ச்சிபின்ங் கடந்த ஆண்டில் இந்திய தலைமை அமைச்சர் நரேந்திர மோடியின் சொந்த ஊரான குஜராத் மாநிலத்தில் இந்திய பயணத்தைத் தொடங்கினார். அதேபோல், மோடி மே 14ஆம் நாள் ஷி ச்சின்பிங்கின் சொந்த ஊரான ஷான்சி மாநிலத் தலைநகர் சி ஆன் நகரில் சீனப் பயணத்தை தொடங்கினார்.
இத்தற்கிடையில், 'சொந்த ஊர்'தூதாண்மை என்ற சிறப்பு சொற்கள் செய்தி ஊடகங்களில் இடம்பெற்றது குறிப்பிடத்தக்கது. எனவே, சீனாவுக்கும் இந்தியாவுக்கும் இடையே 'சொந்த ஊர்'தூதாண்மை என்ற புதிய மாதிரி உருவாகியுள்ளது பற்றி உங்களுக்குத் தெரியுமா?