ஷாங்காயின் வளர்ச்சி சாதனை, பிற வளரும் நாடுகளுக்கு சிறந்த அனுபவங்களை வழங்குகிறது. இந்தியாவும் சீனாவும் ஒத்துழைப்பு மற்றும் பரிமாற்றத்தை வலுப்படுத்தி கூட்டு வளர்ச்சியை நனவாக்குவது இருநாட்டு மக்களின் நலன்களுக்கும் உலகின் பல்வேறு நாட்டு மக்களின் நலன்களுக்கும் பொருத்தமாக உள்ளது என்று மோடி கூறினார்.
ஹான்செங் பேசுகையில், மும்பையின் நட்பு நகராகத் திகழும் ஷாங்காயில் இந்திய மக்கள் அதிகம். இந்தியாவின் பல்வேறு இடங்களுடன் பரிமாற்றங்களை வலுப்படுத்த தொடர்ந்து முயற்சி மேற்கொள்ள ஷாங்காய் விரும்புகிறது என்று தெரிவித்தார்.
இன்று நடைபெற்ற சீன-இந்திய பொருளாதார கருத்தரங்கில் மோடி கலந்து கொண்டு சொற்பொழிவு ஆற்றினார். இந்தியாவில் முதலீட்டை அதிகரிக்குமாறு அவர் சீனத் தொழில் முனைவோருக்கு வேண்டுகோள் விடுத்தார்.
இக்கருத்தரங்கில் கலந்து கொண்ட சீன வணிக அமைச்சர் கௌ ஹுசேங் கூறுகையில், இந்தியத் தலைமை அமைச்சரின் நடப்பு சீனப் பயணம், சீனாவுடன் பொருளாதார மற்றும் வர்த்தக ஒத்துழைப்பை மேற்கொள்ளும் இந்தியாவின் நம்பிக்கை மற்றும் எதிர்பார்ப்பை வெளிப்படுத்துகிறது. இருதரப்புகளுக்கும் பயன் தரும் பரிமாற்றம் இதுவாகும் என்று குறிப்பிட்டார்.