• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
மோடியின் சீனப் பயணத்துக்கு இந்திய பல்வேறு துறைகள் பாராட்டு
  2015-05-17 18:41:00  cri எழுத்தின் அளவு:  A A A   
இந்தியத் தலைமை அமைச்சர் நரேந்திர மோடி மே 14 முதல் 16ஆம் வரை சீனாவில் பயணம் மேற்கொண்டார். தலைமை அமைச்சராகப் பதவியேற்ற பின் அவர் மேற்கொண்ட முதலாவது சீனப் பயணம் இதுவாகும். இது, இருநாடுகளிடையேயான முக்கியத்துவம் வாய்ந்த பயணமுமாகும். இந்திய அரசியல் துறை பிரமுகர்கள், நிபுணர்கள், அறிஞர்கள், செய்தி ஊடகங்கள் ஆகியோர் இருதரப்பும் எட்டியுள்ள சாதனைகளை வரவேற்பதோடு, அரசியல், பொருளாதாரம், வர்த்தகம், பண்பாட்டுப் பரிமாற்றம் உள்ளிட்ட துறைகளில் இருநாட்டு ஒத்துழைப்புகளை முன்னேற்ற இப்பயணம் துணைபுரியும் என்றும் கருத்துக்களைத் தெரிவித்துள்ளனர்.

இந்தியாவின் மூத்த தொலைநோக்கு ஆய்வாளர் ரமெஷ் சோப்ரா பேசுகையில், வரலாற்றின் புதிய துவக்கப் புள்ளியில் நிற்கும் இருநாட்டுத் தலைவர்கள் சீ ஆன் நகரில் மேற்கொண்ட சந்திப்பு, ஆசியாவில் பழமை வாய்ந்த மிகப் பெரிய இவ்விரு நாடுகளின் வளர்ச்சிக்கும் தூண்டுதலாக அமையும் என்று கூறினார்.

இந்திய நாடாளுமன்ற மாநிலங்கள் அவை உறுப்பினர் தருண் விஜய் கூறுகையில், அரசியல் நம்பிக்கை, பொருளாதார மற்றும் வர்த்தக ஒத்துழைப்பு, அரசு சாரா பரிமாற்றம் ஆகியவற்றை வலுப்படுத்துவது குறித்து இருதரப்பும் முக்கிய உடன்படிக்கைகளை உருவாக்கியுள்ளன. இதனால் இருநாட்டுறவும் புதிய கட்டத்தில் நுழைந்துள்ளதையும், இருநாட்டுத் தலைவர்கள் இருதரப்புறவின் வளர்ச்சிக்கு புதிய உயிராற்றலை வழங்குவதையும் இது காட்டுகிறது என்று குறிப்பிட்டார்.

மேலும், இந்தியாவின் 6 முக்கிய தொலைக்காட்சி நிலையங்கள் மோடியின் சீனப் பயணம் தொடங்கியவுடன் தகவல்களை வெளியிட்டு வந்தன. இந்தியாவின் பல்வேறு செய்தியேடுகளின் முகப்பு பக்கத்தில் இப்பயணம் தொடர்பான செய்திகள் வெளியிடப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.

உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040