இந்தியாவின் மூத்த தொலைநோக்கு ஆய்வாளர் ரமெஷ் சோப்ரா பேசுகையில், வரலாற்றின் புதிய துவக்கப் புள்ளியில் நிற்கும் இருநாட்டுத் தலைவர்கள் சீ ஆன் நகரில் மேற்கொண்ட சந்திப்பு, ஆசியாவில் பழமை வாய்ந்த மிகப் பெரிய இவ்விரு நாடுகளின் வளர்ச்சிக்கும் தூண்டுதலாக அமையும் என்று கூறினார்.
இந்திய நாடாளுமன்ற மாநிலங்கள் அவை உறுப்பினர் தருண் விஜய் கூறுகையில், அரசியல் நம்பிக்கை, பொருளாதார மற்றும் வர்த்தக ஒத்துழைப்பு, அரசு சாரா பரிமாற்றம் ஆகியவற்றை வலுப்படுத்துவது குறித்து இருதரப்பும் முக்கிய உடன்படிக்கைகளை உருவாக்கியுள்ளன. இதனால் இருநாட்டுறவும் புதிய கட்டத்தில் நுழைந்துள்ளதையும், இருநாட்டுத் தலைவர்கள் இருதரப்புறவின் வளர்ச்சிக்கு புதிய உயிராற்றலை வழங்குவதையும் இது காட்டுகிறது என்று குறிப்பிட்டார்.
மேலும், இந்தியாவின் 6 முக்கிய தொலைக்காட்சி நிலையங்கள் மோடியின் சீனப் பயணம் தொடங்கியவுடன் தகவல்களை வெளியிட்டு வந்தன. இந்தியாவின் பல்வேறு செய்தியேடுகளின் முகப்பு பக்கத்தில் இப்பயணம் தொடர்பான செய்திகள் வெளியிடப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.