மே 27, 28ஆம் நாட்களில் ஆசிய-ஐரோப்பிய இடை இணைப்பு துறையின் பேச்சுவார்த்தை சீனாவின் சோங்சிங் மாநகரில் நடைபெற உள்ளது. சீனத் துணைத் தலைமை அமைச்சர் சாங் கௌலி இப்பேச்சுவார்த்தையின் துவக்க விழாவில் கலந்து கொண்டு உரை நிகழ்த்துவார்.
மேலும், சீன அரசவை உறுப்பினர் யாங் ஜேசூ ரஷியாவின் அழைப்பை ஏற்று, மே 25, 26ஆம் நாட்களில் மாஸ்கோவுக்குச் சென்று, அங்கே நடைபெறும் பிரிக்ஸ் நாடுகளின் பாதுகாப்பு விவகாரத்துக்கான உயர் பிரதிநிதிகளின் 5ஆவது கூட்டத்தில் கலந்து கொள்ளவும், சீனா-ரஷியா இடையேயான 11ஆவது சுற்று தொலைநோக்கு பாதுகாப்பு கலந்தாய்வை நடத்தவும் உள்ளார். சீன வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் ஹோங் லெய் 21ஆம் நாள் நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில் இத்தகவல்களைத் தெரிவித்தார்.