25ஆம் நாளிரவு 7 மணி 55 நிமிடம் அளவில் ஹேநான் மாநிலத்திலுள்ள முதியோர் இல்லம் ஒன்றில் தீ விபத்து ஏற்பட்டது. அதில் 38 பேர் உயிரிழந்தனர். 6 பேர் காயமுற்றனர்.
இவ்விபத்து மீது சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்திய கமிட்டியும் அரசும் பெரும் கவனம் செலுத்தியுள்ளன. சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங் இவ்விபத்து குறித்து, ஹேநான் மாநிலமும் தொடர்புடைய வாரியங்களும் முழுமூச்சுடன் காயமுற்றோருக்கு மீட்புதவி மற்றும் சிகிச்சை அளிக்கவும், உயிரிழந்தோரின் பூதவுடல்களை அடக்கம் செய்து அவர்களின் குடும்பத்தினரை அமைதிப்படுத்தும் பணியை செவ்வனே செய்யவும் வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளார்.