முன்னெச்சரிக்கை அமைப்பு முறைக்கான சீர்திருத்தம் பற்றிய உலக சுகாதார அமைப்பின் கொள்கை
68வது உலகச் சுகாதார பேரவை கூட்டம் மே 26ஆம் நாள் ஜெனீவாவில் நிறைவு பெற்றது. உலக சுகாதார அமைப்பு, முன்னெச்சரிக்கை அமைப்பு முறைக்கான சீர்திருத்தத்தை ஆழமாக்கி, பொது சுகாதார நிலைமையை வளைந்து கொடுக்கும் முறையிலும், பயன்தரும் முறையிலும் சமாளிக்கும் என்று இவ்வமைப்பின் தலைமை இயக்குநர் மார்கரெட் சென் தெரிவித்தார்.
மேலும், உலக சுகாதார அமைப்பு 10 கோடி அமெரிக்க டாலர் மதிப்புள்ள அவசர நிதியை நிறுவும். அத்துடன், சர்வதேசச் சுகாதார விதிகளை மதிப்பிடும் வகையில், இவ்வமைப்பு பரிசீலனை குழுவை உருவாக்கி, திடீரென ஏற்படும் நோய்களை நிகழ்ச்சிகளைத் தடுக்கும் ஆற்றலை மேம்படுத்தும்.