மே திங்கள் 29 முதல் 31ஆம் நாள் வரை சீன மக்கள் விடுதலைப் படையின் துணைத் தலைமைத் தளபதி சுன் சியன்கோ சிங்கப்பூரில் நடைபெறும் ஷாங்க்ரிலா பேச்சுவார்த்தையில் கலந்துகொள்வார். சீனத் தேசிய பாதுகாப்பு அமைச்சகத்தின் செய்தித்தொடர்பாளர் யாங் யுஜுன் 26ஆம் நாள் இச்செய்தியை அறிவித்தார்.
பேச்சுவார்த்தைக் கூட்டத்தில் தளபதி சுன் சியென்கோ சொற்பொழிவு நிகழ்த்தி, சீனாவின் வெளியுறவு மற்றும் தேசிய பாதுகாப்புக் கொள்கைகளை விளக்கிக்கூறுவார். அதேவேளை, பல்வேறு நாடுகளின் படைகளிடையே பேச்சுவார்த்தை ஒத்துழைப்பை வலுப்படுத்தி, ஆசிய-பசிப்பிக் பிரதேசத்தின் பாதுகாப்பைக் கூட்டாக பேணிக்காக்கும் முன்மொழிவை முன்வைப்பார் என்று தெரிகிறது.