சிரியாவின் மிதவாத எதிர்ப்புப் பிரிவு கசகஸ்தான் தலைநகர் அஸ்தானாவில் சிரியாவின் பிரச்சினை குறித்து பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. சிரிய மோதல்களில் பங்கெடுத்த எல்லா வெளிநாட்டு ஆயுதப் படைகளும் சிரியாவிலிருந்து வெளியேற வேண்டும் என்று இப்பிரிவு மே 28ஆம் நாள் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது.
பயங்கரவாதத்துக்கு நிதி மற்றும் உதவியை வழங்கத் தடை செய்யும் சர்வதேச ஒப்பந்தத்தைப் பின்பற்றுவோம். அத்துடன், ஐ.எஸ் என்னும் அதி தீவிரவாதத்துக்கு ஆதரவு அளிக்க மாட்டோம் என்று இந்த எதிர்ப்புப் பிரிவு உறுதி கூறியுள்ளது.