அமெரிக்காவில் நச்சான வேதிப் பொருட்களை ஏற்றிச்செல்லும் சரக்கு தொடர் வண்டி ஒன்று ஜூலை முதல் நாள் டென்னீசீ மாநிலத்தில் தடம் புரண்டு தீ பிடித்தது. இவ்விபத்து நிகழ்ந்த இடத்துக்கு அருகிலுள்ள சுமார் 5000 குடிமக்கள் உடனடியாக அப்புறப்படுத்தப்பட்டுள்ளனர். 2ஆம் நாள் விடியற்காலை வரை, தொடர் வண்டி பெட்டிகள் தொடர்ந்து எரிந்தன.
தொடர் வண்டி விபத்தால் பணியாளர்களும், அருகிலுள்ள குடிமக்களும் யாரும் பாதிக்கப்படவில்லை.
தற்போது இவ்விபத்து பற்றிய புலனாய்வு நடைபெற்று வருகின்றது.