ஈரான் அணு ஆற்றல் பிரச்சினை பற்றிய பேச்சுவார்த்தையில் கலந்து கொண்டுள்ள சீன வெளியுறவு அமைச்சர் வாங் யீ வியன்னாவில் ஈரான் வெளியுறவு அமைச்சர் ஜவாத் சாரிப்பைச் சந்தித்தார். தற்போது இப்பேச்சுவார்த்தையின் நிலைமை பற்றியும், பேச்சுவார்த்தையில் ஏற்பட்டுள்ள பிரச்சினைகள் பற்றியும் அவர்கள் ஆழமாக விவாதித்துள்ளனர்.
தற்போது ஈரான் அணு ஆற்றல் பிரச்சினை, இறுதியான தீர்க்கமான காலக் கட்டத்தில் நுழைந்துள்ளது. பல்வேறு தரப்புகள் நியாயமான சமமான பன்முக உடன்படிக்கையை எட்டுவதற்கு இறுதியான தடைகளை அகற்ற வேண்டும் என சீனா விரும்புவதாக வாங் யீ தெரிவித்தார்.
பன்முக உடன்படிக்கையை எட்டி, ஈரான் மீதான தடை நடவடிக்கையை நீக்கச் செய்யும் வகையில் ஈரான் முயற்சி மேற்கொள்கின்றது என்றும், இது பற்றி சீனாவுடன் நெருக்கமாக தொடர்பு மேற்கொள்ள விரும்புவதாகவும் சாரிப் தெரிவித்தார்.