பிரேசில், ரஷியா, இந்தியா, சீனா ஆகிய நாடுகளின் ஆங்கில பெயர்களின் முதல் எழுத்துக்கள், ஒன்றாக சேர்க்கப்பட்டு, ஆங்கிலத்தில் பிரிக் என்ற சொல் உருவாக்கப்பட்டது. எனவே, 2009ஆம் ஆண்டு, இந்த நான்கு நாடுகளால் உருவாக்கப்பட்ட அமைப்பு, பிரிக் நாடுகள் என சுருக்கமாக அழைக்கப்படுகிறது.
2010ஆம் ஆண்டு தென் ஆப்பிரிக்கா இந்த அமைப்பில் சேர்ந்த பிறகு, பிரிக் உடன் ஸ் இணைக்கப்பட்டு, பிரிக்ஸ் என பெயர் சூடப்பட்டுள்ளது. இதற்கு பிறகு, பிரிக்ஸ் நாடுகள் அமைப்பு அதிகாரப்பூர்வமாக அழைக்கப்பட்டு வருகிறது.
2015ஆம் ஆண்டு ஜனவரி முதல் தேதி முதல், பிரிக்ஸ் அமைப்பின் நடப்புத் தலைமை பதவியை ரஷியா வகித்து வருகிறது.
2015ஆம் ஆண்டுக்கான பிரிக்ஸ் அமைப்பின் 7-வது உச்சி மாநாடு ஜுலை 8,9 ஆகிய நாட்களில் ரஷியாவின் உஃபா நகரில் நடைபெறவுள்ளது