39ஆவது ஐ.நா யுனேஸ்கோ அமைப்பின் உலக மரபுச் செல்வ குழுக் கூட்டத்தில், உலக மரபுச்செல்வங்களை புதிதாக அதிகரிப்பது பற்றிய பரிசீலனை பணி 5ம் நாள் முடிந்தது. 2015ஆம் ஆண்டு சீனாவின் து சி சிதிலம் உள்ளிட்ட 24 மரபுச் செல்வங்கள், உலக மரபுச் செல்வப் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளன. உலக மரபு செல்வப்பட்டியலில் சீனாவின் மரபுச் செல்வங்களின் எண்ணிக்கை, 48ஐ எட்டி, உலகளவில் இத்தாலியை அடுத்து இரண்டாம் இடம் வகிக்கின்றது.
13ஆம் நூற்றாண்டு முதல் 20ஆம் நூற்றாண்டின் துவக்கம் வரை, சீனாவின் யுவன், மிங் மற்றும் சிங் வம்சக்கால மத்திய அரசுகள், தென் மேற்கு சீனாவின் சிறுபான்மை தேசிய இனப் பிரதேசத்தில் து சி அமைப்பு முறையை நடைமுறைப்படுத்தின. உள்ளூர் தலைவரை து சி என்ற பதவியாக மத்திய அரசு நியமித்தன. இன்று வரை நிலைநிறுத்தப்பட்ட து சி நகர் மற்றும் அலுவலகக் கட்டிடங்களின் சிதிலம், து சியின் அலுவல் மற்றும் வாழ்க்கை மையமாக இருந்தது என்பது குறிப்பிட்டத்தக்கது.
இது வரை, உலக மரபுச் செல்வப் பட்டியலில் 1031 மரபுச் செல்வங்கள் சேர்க்கப்பட்டுள்ளன.