ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு உறுப்பு நாடுகளின் தலைவர்கள் செயற்குழுவின் 15ஆவது உச்சி மாநாடு வரும் 9 மற்றும் 10 ஆகிய நாட்களில் ரஷியாவின் உஃபாவில் நடைபெறவுள்ளது. இந்தியாவும் பாகிஸ்தானும் இவ்வமைப்பில் சேரும் ஒழுங்குமுறை இம்மாநாட்டில் துவங்கப்படும்.
ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு புதிய வளர்ச்சிக் கட்டத்தில் நுழைந்துள்ளது என்பதை இது காட்டுவதாக இவ்வமைப்பின் தலைமைச் செயலாளர் டிமித்ரி மெசென்ச்சேவ் தெரிவித்துள்ளார்.
6ஆம் நாள் செய்தியாளருக்குப் பேட்டியளிக்கையில், 2025ஆம் ஆண்டு வரையான ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் வளர்ச்சி நெடுநோக்குத் திட்டம் உள்பட 14 முக்கிய ஆவணங்கள் நடப்பு உச்சிமாநாட்டில் நிறைவேற்றப்படும் என்றும் அவர் கூறினார்.