• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
சீன-ரஷிய தலைவர்களுக்கிடையில் பேச்சுவார்த்தை
  2015-07-09 18:21:58  cri எழுத்தின் அளவு:  A A A   

சீன அரசுத் தலைவர் ஷி ச்சின்பீங் 8ஆம் நாள், ரஷியாவின் உஃபாவில் அந்நாட்டின் அரசுத் தலைவர் புதினுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். இவ்வாண்டில் அவர்கள் இருவரும் நடத்தும் 2வது பேச்சுவார்த்தை இதுவாகும்.
சீன-ரஷிய பொருளாதாரத்தின் கட்டமைப்பில்ஒன்று மற்றதன் தேவையை நிறைவு செய்வதற்குரிய தன்மை உண்டு. பரந்த துறைகளில் ஒத்துழைப்பு வாய்ப்புகள் உள்ளன. சந்தையில் வளர்ச்சி வாய்ப்பு அதிகம். இரு நாடுகளுக்கிடையிலான பொருளாதாரம் மற்றும் வர்த்தக ஒத்துழைப்பை ஆழமாக்க வேண்டும். ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு, பட்டுப் பாதை மண்டலப் பொருளாதாரம் மற்றும் ஐரோப்பிய-ஆசிய பொருளாதார கூட்டாளிக்கான முக்கிய மேடையை வழங்கி, இரு தரப்புகளின் ஒத்துழைப்புக்கான வளர்ச்சி வாய்ப்புகளை விரிவாக்க, மனிதப் பரிமாற்றத்தை ஊக்குவிக்க வேண்டும் என்று ஷி ச்சின்பீங் தெரிவித்தார்.நடைபெறவுள்ள பிரிக்ஸ் நாடுகளின் தலைவர்களுக்கான 7ஆவது பேச்சுவார்த்தையில் சீனா மிகுந்த கவனம் செலுத்தி வருகிறது. நம்பிக்கையை வலுப்படுத்தி, ஒத்துழைப்பை விரைவுப்படுத்தி, பிரிக்ஸ் நாடுகள் மேலும் நெருக்கமாக, பன்முகங்களிலும், சீரான கூட்டாளியுறவை கட்டியமைக்க சீனா முயற்சி செய்யும் என்றும் அவர் வலியுறித்தினார்.
ரஷிய-சீன பன்முக நெடுநோக்குக் கூட்டாளியுறவு தொடர்ந்து ஆழமாகி வருகிறது. பல்வேறு துறைகளில் ஒத்துழைப்பு மேலும் நெருக்கமாக இருக்கிறது. சர்வதேச விவகாரத்தில் ஆக்கப்பூர்வமாக இரு தரப்பும் ஒத்துழைத்து வருகின்றன. ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு மற்றும் பிரிக்ஸ் நாடுகள் எனும் கட்டுகோப்புக்குள் மேலும் நெருக்கமான ஒருங்கிணைப்பை வலுப்படுத்த இரு நாடுகளும் பாடுபடும் என்று புதின் தெரிவித்தார்.

உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040